நூல் அறிமுகம் – “பறவைகள் சொல்லும் அறிவியல்”
பறவை பறப்பதைப் பார்த்து பரவசப்படாதவர்கள் யாருமில்லை.
சிறுவயதில் பறவைகள் வானில் பறக்கக் காணும் போதே நம்
மனதில் உருவாகும் வியப்பே மனிதனை விமானம் உருவாக்கும்
நிலைக்கு அழைத்துச் சென்றது. “பறவையைக் கண்டான், விமானம்

படைத்தான்” என்ற சொற்றொடர் இவ்வுலகின் நித்திய உண்மையைச்
சொல்கிறது. ஆனால், பறவையின் வாழ்க்கையையும் அதன்
பறக்கும் விதத்தையும் அறிவியல் பார்வையில் ஆராய்ந்து,
அதிலிருந்து கற்றுக்கொள்வோர் மிகச் சிலரே.
பறவைகள் வெறும் விலங்குகள் அல்ல; அவை உயிரின் அற்புதக்
கலையையும், இயற்கையின் பொறியியலையும் பிரதிபலிக்கின்றன.
சிறகுகளின் வடிவம், எடை, உடலமைப்பு, வாலின் சமநிலை,
பறக்கும் திசைமாற்றங்கள் என ஒவ்வொன்றிலும் அறிவியல்
மறைந்துள்ளது. அந்த அறிவியலை எளிமையாகவும்,
சுவாரசியமாகவும் எடுத்துரைப்பதே இந்நூலின் நோக்கம்.
மாயாபஜார் இதழில் முதன்முதலில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள்,
சிறார்களும் பெரியவர்களும் ஒரே அளவில் வாசித்து ரசித்தனர்.
பறவைகள் எவ்வாறு பறக்கின்றன, எத்தனை விதமாக வாழ்கின்றன,
ஏன் சில பறவைகள் பறக்க முடியாது போன்ற பல கேள்விகளுக்குப்
பதில் அளிக்கும் வகையில், எழுத்தாளர் பெ. சசிக்குமார் அவர்கள்
இந்நூலை உருவாக்கியுள்ளார்.
சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முன் பறக்கும் டைனோசர்
இனங்களிலிருந்து உருவாகிய பறவைகள், இன்று உலகம்
முழுவதும் 11,000-க்கும் மேற்பட்ட இனங்களாக பரவியுள்ளன.
ஒவ்வொரு பறவையும் தனித்துவம் கொண்டது; அதன் வாழ்வியல்
ஒரு புதிய பாடம்.
பறவைகளை நேசிப்பவருக்கும், அறிவியலை அறிய
விரும்புபவருக்கும், சிறார்களுக்கும் இந்நூல் ஒரு சிறந்த பரிசு.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பறப்பதுவே”

Your email address will not be published. Required fields are marked *